கல்கிஸ்ஸை பிரதேசத்தில் இருத்தரப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று பிறப்கல் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவின் இரத்மலானை பிரதேசத்தின் சில்வெஸ்டர் வீதிக்கு அருகில் இருத்தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் நீண்டதில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்போது, இருவர் மீது கத்திக் குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்கள் கலுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் படுகாயமடைந்திருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இரத்மலானை வெடிகந்த வீதியை சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் கலுபோவில மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது..
மேற்படி கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், கல்கிஸ்ஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.