வல்லாப்பட்டை தொகையுடன் 3 பேர் கைது

282 0

நக்கல்ஸ் பாதுகாப்பு வனப்பகுதியில் நீண்ட காலமாக வல்லாப்பட்டை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த மூன்று சந்தேகநபர்கள் வல்லாப்பட்டை தொகை ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் வன பாதுகாப்பு அதிகாரிகளால் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தளை தன்கந்த பிரதேசத்தை சேர்ந்த சந்தேநபர்களிடம் இருந்து சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியுடைய 15 கிலோ கிராம் வல்லாப்பட்டை கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது, வல்லாப்பட்டை வெட்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் , வல்லாப்பட்டை தொகையை வெட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் முச்சக்கரவண்டி ஆகியன நாவுல நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளன.