ஓரிரு மாதங்களில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவிருக்கும் நிலையில் ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக மக்கள் தீர்ப்புக்கு செல்வதற்கான உரிய காலம் இது அல்ல.
தற்போது ஜனாதிபதியின் அதிகாரங்களில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதும் ஏற்புடையதல்ல. ஆகவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் தெரிவாகும் புதிய ஜனாதிபதியின் கீழ் இது குறித்து தீர்மானங்களை எடுப்பது பொருத்தமானதாக இருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.
பொரளையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.