கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வாளகத்தின் முன்னர் இன்று முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை ஆர்ப்பாட்டம், பேரணிகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர கூறியுள்ளார்.

 

குறித்த தடையுத்தரவானது புதுக்கடை பிரதான நீதிவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சிங்க தேசிய அமைப்பு மற்றும் ராவண பலய அமைப்புகளுக்கும் இன்று முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்துடன் பொதுமக்களுக்கும் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கும் எவ்வித இடையூறுகளையும் ஏற்படுத்த வேண்டாம் எனவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.