கழிவுத் தேயிலையை கடத்திச் சென்ற பாரவூர்தியின் சாரதி கைது

224 0

கம்பளை-எத்கால பகுதியில் கழிவுத் தேயிலையை கொண்டுச் சென்ற பாரவூர்தியொன்றின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதன்போது, மனித பயன்பாட்டுக்கு பயன்படாத 2360 கிலோகிராம் கழிவுத் தேயிலையை மீட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கம்பளை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமையவே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றதாக தெரிவித்துள்ள கம்பளை பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.