சஜித்தை வேட்பாளராக்கினால் கூட்டங்கள் நிறுத்தப்படும் – அசோக அபேசிங்க

224 0

சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதி வேட்பாளர் பதவியை வழங்கும் வரையில் அவருக்கான ஆதரவுக் கூட்டங்களை நிறுத்தமாட்டோம் என இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

கட்சியிலுள்ள சிலருக்கு சஜித்துக்குள்ள ஆதரவை விளங்க வைக்கவே, இந்த ஆதரவுக் கூட்டங்களை நடாத்துகின்றோம் எனவும் தெரிவித்த அசோக அபேசிங்க, எதிர்வரும் 6 ஆம் திகதி குருணாகலையில் நடைபெறவுள்ள சஜித் ஆதரவுக்  கூட்டத்துக்கு எந்த தடை வந்தாலும் நடாத்துவோம் எனவும் அவர் கூறியுள்ளளார்.

கட்சிக்கு அவப்பெயர் வரும் வகையில் அறிவிப்புக்களை விடுக்காதிருக்கவும், கட்சியின் அனுமதியின்றி கூட்டங்களை நடாத்தாதிருக்கவும் வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் கட்சி உறுப்பினர்களிடம் நேற்று விடுத்துள்ள அறிவிப்புக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். (