பலாலியில் இருந்து விசாகப்பட்டினத்துக்கு சேவையில் ஈடுபடவுள்ள பிட்ஸ் எயர் விமானம்

227 0

கொழும்பு- இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து, இலங்கையின் தனியார் துறை விமான நிறுவனமான பிட்ஸ் எயர் (FITS AIR) நிறுவனம், முதலாவது வெளிநாட்டு பயணிகள் விமான சேவையை ஆரம்பித்துள்ளது.

இரத்மலானையில் இருந்து இந்தியாவின் விசாகப்பட்டினம் விமான நிலையத்துக்கான இந்த விமான சேவை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

பலாலி, மட்டக்களப்பு விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் நிறைவடைந்ததும், இங்கிருந்து பயணிகள் விமான சேவைகளை ஆரம்பிக்கவும், பிட்ஸ் எயர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதேவேளை கடந்த செவ்வாய்கிழமை காலை 6 மணிக்கு இரத்மலானையில் இருந்து புறப்பட்ட, பிட்ஸ் எயர் நிறுவனத்தின் 70 ஆசனங்களைக் கொண்ட ATR 72 விமானம், காலை 9.10 மணியளவில் விசாகப்பட்டினத்தை சென்றடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.