இலங்கையின் தலைநகரமாக வவுனியாவை மாற்றுவேன்- பெண் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு

237 0

தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் வவுனியா நகரை இலங்கையின் தலைநகரமாக மாற்றுவேன் என இலங்கை சோசலிச கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அஜந்தா பெரேரா தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அஜந்தா பெரேரா மேலும் கூறியுள்ளதாவது, “யுத்தக் காலத்தில் வவுனியாவில் பணியாற்றியிருந்தமையினால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து நன்கு தெரியும். ஆகையாலேயே அவர்களை நான் ஆதரிக்கின்றேன்.

மேலும் ஏனைய பகுதிகளைக் காட்டிலும் வவுனியாவில் அனைத்து வளங்களும் உள்ளன.

ஆகையால் வவுனியாவை நாட்டின் தலைநகரமாக்குவது சிறந்தது. அந்தவகையில் நாட்டின் ஜனாதிபதியாக வரும்போது, அதனை நான் செய்வேன்.

மேலும் தமிழர்களின் கோரிக்கைகளை அவர்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறு நிறைவேற்றிக்கொடுக்கவும் தயாராக இருக்கின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.