ஹெரோயின் மற்றும் கஞ்சாவுடன் 4 பேர் கைது

218 0

கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் 217 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 1832 மில்லிகிராம் கேரள கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் இன்று இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20-30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் கண்டி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.