தற்கொலைக்கு முயன்ற நபர் விளக்கமறியலில்

238 0

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தற்கொலை செய்வதற்கு முயன்ற நபர் ஒருவரை செப்டெம்பர் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க  இன்று  உத்தரவிட்டுள்ளார்.

பாலையூற்று, திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில்  தெரிய வருவதாவது,

சந்தேக நபர் போதைக்கு அடிமையானவர் எனவும், தினமும் தாய் தந்தையிடம் பணம் கேட்டு சன்டையிட்டுள்ளார்.

சம்பவ தினம் பணம் கேட்டு வீட்டில் உள்ள பொருட்களை உடைத்து சண்டையிட்ட போது பணம் கொடுக்க பெற்றோர்கள் மறுத்ததினால் தனது தாயின் சாரியை கட்டி தூக்கில் தொங்கி  தற்கொலைக்கு முயன்ற போதே பெற்றோர்களினால் காப்பாற்றப்பட்டதாகவும்,தற்கொலைக்கு முயன்றதில் கழுத்துப் பகுதியில்  சாரி இறுகி தழும்புகள் காயங்கள் காணப்படுவதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.