திருமண மோதிரத்திற்காக பெற்ற தந்தையின் உயிரையே எடுத்த மகன்!

256 0

ஆனமடுவ , பல்லம பிரதேசத்தில் மகனால் தாக்கப்பட்ட நிலையில், தந்தையொருவர் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஆனமடுவ , பல்லம பிரதேசத்தில் தந்தை மகனுக்கிடையிலான வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியே குறித்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் இரு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு  உயிரிழந்துள்ளார். மேலும் உயிரிழந்த நபரின் மகனின் திருமணம் ஒரு மாதத்திற்கு முன்னரே இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், சில தினங்களாக மகனின் திருமண மோதிரம் காணாமல் போயுள்ள நிலையில், பல இடங்களில் தேடியும் மோதிரம் கிடைக்கவில்லை.

இந்நிலையில், சம்பவ தினத்தன்றே, குறித்த மோதிரத்தை திருமணமானவரின் தந்தையான உயிரிழந்த நபர் திருடி அடகு வைத்து, மது அருந்தியமை தெரியவந்துள்ளது. இதனை கேட்ட மகனிடம் குறித்த தந்தை வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதன்போது குறித்த நபர், அவரது தந்தையை பலமாக தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில், சந்தேக நபரான மகனை பல்லம பொலிஸார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனமடுவ , பல்லம பிரதேசத்தில் மகனால் தாக்கப்பட்ட நிலையில், தந்தையொருவர் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.