வவுனியா மாவட்ட பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் சோதனையும் , அணிவகுப்பும்

350 0

பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டலில் பொலிஸ் திணைக்களத்தினால் வவுனியா மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் அரையாண்டுக்கான சோதனைகள் இன்று காலை ஆரம்பமாகின.

வவுனியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்ஸலாதசில்வா தலைமையில் இச்சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றன.

பொலிஸ் நிலையங்களை பரிசோதித்தல், பொலிஸாரின் உடைகளை பரிசோதித்தல், மோப்ப நாயினை பரிசோதித்தல், பொலிஸாரின் பாவனையிலுள்ள ஜீப் வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள், துவிச்சக்கர வண்டிகள் உட்பட அனைத்து வாகனங்களும் சோதிக்கப்பட்டன.

மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களிலும் இத்தகைய அரையாண்டு சோதனைகள் பொலிஸ் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வளாகத்திலுள்ள மைதானத்தில் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையும் இடம்பெற்றது.

இதன்போது மாவட்ட  சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.பி.திஸ்ஸாலாதசில்வா, உதவி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.பி.மல்வலகே, வவுனியா  பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சி.ஐ.பிரசன்ன வெலிகல, வவுனியா பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட வவுனியா பிராந்தியத்தில் இருக்கின்ற பொறுப்பதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் என  பலரும் கலந்து கொண்டனர்.