வத்தளையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

291 0

வத்தளை – பலகல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போதே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் வத்தளையைச் சேர்ந்த 44 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.