மோட்டார் வாகனத்துடன் ​மோதி ஒருவர் பலி

300 0

மாதம்பை, கலஹிட்டியவ சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோட்டார் வாகனம் ஒன்றும் மோதிக் கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு 9 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாதம்பை பகுதியை சேர்ந்த 34 வயதுடைய மஹேஷ் குமார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் மோட்டார் வாகன ஓட்டுனர் மாதம்பை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மாதம்பை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.