மைத்­திரி – மஹிந்த விரைவில் சந்­திப்பு !

292 0

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி ­பால சிறி­சே­னவுக்கும் சிறி­லங்கா பொது­ஜன பெர­மு­னவின் தலைவர் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ­வுக்கும் இடையில் அடுத்த வார­ம­ளவில் முக்­கிய சந்­திப்பு இடம்­பெ­ற­வுள்ள­தாக கட்சி மட்­டத்தில் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவும் இணைந்து கூட்­டணி அமைப்­பது தொடர்­பாக நாளை செவ்­வாய்க்­கி­ழமை மீண்டும் பேச்­சு­வார்த்­தை­களை ஆரம்­பிக்­க­வுள்­ளன.

அந்தப் பேச்­சு­வார்த்­தை­களின் பின்­னரே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்­ச­வுக்கும் இடை­யி­லான இந்தச் சந்­திப்பு இடம்­பெறும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இதன்­போது எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்தல் மற்றும் அடுத்த கட்­ட­மாக எவ்­வாறு இணைந்து செயற்­ப­டு­வது என்­பது தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வுள்­ளது.

ஏற்­க­னவே இரண்டு  வாரங்­க­ளுக்கு முன்னர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­ச­னே­வுக்கும் முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்­ச­வுக்கும் இடையில் தீர்க்­க­மான ஒரு சந்­திப்பு நடை­பெற்­றி­ருந்­தது.

அதன் பின்­னரே கடந்த 11 ஆம் திகதி ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கோத்­த­பாய ராஜ­பக்­சவை எதிர்க்­கட்சித் தலைவர் மகிந்த ராஜ­பக்ச அறி­வித்­தி­ருந்தார். எப்­ப­டி­யி­ருப்­பினும் பரந்­து­பட்ட கூட்­டணி அமைப்­பது தொடர்பில் சுதந்­திரக் கட்­சியும் பொது­ஜன பெர­மு­னவும் பேச்­சு­வார்த்­தை­களை கடந்ம காலத்தில் நடத்­திய போது அவற்றில் முழுமையான இணக்கப்பாடு எட்டப்படவில்லை.

இந்த நிலையிலேயே நாளை செவ்வாய்க்கிழமை முதல் இரண்டு தரப்பினருக்கும் இடையில் மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன.