அரசியல் மாற்றம் அலுவலகத்தின் செயற்பாடுகளைப் பாதிக்காது – சாலிய பீரிஸ்

255 0

காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்று கண்டறிந்து கூறுமாறு வலியுறுத்துகின்றவர்களே, ஒவ்வொரு பிரதேசங்களிலும் எமது பிராந்திய அலுவலகங்கள் திறக்கப்படுவதை எதிர்க்கின்றார்கள். யாழில் காணாமல்போன ஒருவரை மொணராகலையில் திறக்கப்படும் அலுவலகத்தின் ஊடாகக் கண்டறிய முடியாது.

எனவே காணாமல்போனோரின் உறவினர்கள் இப்பிராந்திய அலுவலகங்களின் அவசியத்தை சரிவரப் புரிந்துகொள்ள வேண்டும் என்று காணாமல்போனோர் அலுவலகத்தின் தவிசாளர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார்.

காணாமல்போனோர் அலுவலகத்தின் பிராந்திய அலுவலகங்கள் நாட்டின் குறித்த சில பிரதேசங்களில் திறக்கப்பட்டு வருகின்ற நிலையில், இன்று யாழ்ப்பாணத்தில் காணாமல்போனோர் அலுவலகத்தின் பிராந்தியக்கிளை திறக்கப்பட்டது.

எனினும் இவ்வாறு பிராந்திய அலுவலகங்கள் திறக்கப்படுவதால் எவ்வித பயனுமில்லை என்றும், இது வெறுமனே காலத்தைக் கடத்தும் செயலே என்றும் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கம் தொடர்ச்சியாகத் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றது.