தேர்தல் பிரச்சாரங்களுக்கு 29 பேரை அமைச்சில் – ராஜித மீது முறைப்பாடு

255 0

அமைச்சர் ராஜித சேனாரத்ன தனது தேர்தல் பிரச்சாரங்களுக்காக 29 பேரை சுகாதார அமைச்சில் இணைத்துக் கொண்டுள்ளமை தொடர்பில் தமது சங்கத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சின் செயலாளரிடம் முறையிடவுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித்த அளுத்கே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.