தாக்குதல்தாரிகளுக்கு எமது அரசாங்கத்தில் கடுமையான தண்டனை வழங்கப்படும்-எஸ்.எம்.சந்திரசேன

216 0
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் இறுதி முடிவு அறிவிக்கப்படவில்லையாயின், பொதுஜன பெரமுன அதிகாரத்திற்கு வந்த பின்னர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, உரிய தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், தெரிவுக் குழு நகைப்புக்குரியது எனவும், குற்றவாளிகளை நிரபராதிகளாக ஆக்குவதாகவும், நிரபராதிகளை குற்றவாளிகளாக ஆக்குவதாகவும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், தெரிவுக் குழுவின் அறிக்கை மீது நம்பிக்கையில்லை என்றும், தத்தமது பிழைகளை மறைத்துக்கொள்வது மாத்திரமே தெரிவுக் குழுவால் மேற்கொள்ளப்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன மேலும் தெரிவித்தார்.