வைத்தியசாலையின் 6 ஆவது மாடியில் இருந்து குதித்து யுவதி ஒருவர் தற்கொலை

260 0
பொரலஸ்கமுவ, வேரஹெர கொத்தலாவல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த யுவதி ஒருவர் வைத்தியசாலையின் 6 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த யுவதி நேற்று மாலை 6.45 மணியளவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவர் மனநிலை வைத்திய பிரிவில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பன்னிப்பிட்டிய, மாலபல்ல பகுதியை சேர்ந்த யுவதி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொரலஸ்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.