படைவீரர்களுக்கான பொறுப்புக்கள் வரையறையின்றி நிறைவேற்றப்படும்- சஜித்

276 0

முப்பது வருட கால யுத்தத்ததை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டை மீட்டெடுத்த படை வீரர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் எந்தவித வரையறைகளும் இன்றி பொறுப்புக்கள் நிறைவேற்றப்படுமென்று அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஆனமடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

படைவிரர்களின் சேமநலத்திற்காக தற்போதைய அரசாங்கம் பாரிய பணிகளை நிறைவேற்றியுள்ளது.

இதற்கான வேலைத்திட்டங்களை மேலும் வலுப்படுத்தி தொடர்ந்தும் முன்னெடுப்பதற்காக புதிய நடைமுறைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.

படைவீரர்களுக்காக உதாகம திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.