3 கோரிக்கைகளை முன்வைத்து கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணித்துள்ள யாழ். பல்கலை. மாணவர்கள்

286 0

மாணவர்களின் நலன் சார்ந்து மூன்று கோரிக்கைகளை முன்வைத்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வியாழக்கிழமை தமது கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணித்துள்ளனர்.

மாணவர்களின் நலன் சார்ந்து மூன்று கோரிக்கைகளை முன்வைத்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வியாழக்கிழமை தமது கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணித்துள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கடந்த 13 ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் தகுதி வாய்ந்த அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தின் மூலம் இந்த விடயங்கள் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பட்டக் கல்வியை நிறைவு செய்த பல மாணவர்களுக்கு இது வரை பட்டமளிப்பு நடாத்தப்படவில்லை. இதற்கு வேந்தர் நியமனம் செய்யப்படாமை காரணமாகச் சொல்லப்படுகிறது.

எனவே உடனடியாக வேந்தர் நியமனத்தை விரைவாக நடத்துவதன் மூலம் பட்டமளிப்பு விழாவை நடத்த வேண்டும் என்றும் , மூன்று மாத காலத்துக்கு மேலாக வெளியிடப்படாமலிருக்கும் பரீட்சை முடிவுகளை வெளியிட வேண்டும் என்றும் குறிப்பிட்டு  இன்று 15 ஆம் திகதி வியாழக்கிழமை தமது கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணிக்த்துள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கடந்த 13 ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் தகுதி வாய்ந்த அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தின் மூலம் இந்த விடயங்கள் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பட்டக் கல்வியை நிறைவு செய்த பல மாணவர்களுக்கு இது வரை பட்டமளிப்பு நடாத்தப்படவில்லை. இதற்கு வேந்தர் நியமனம் செய்யப்படாமை காரணமாகச் சொல்லப்படுகிறது.

எனவே உடனடியாக வேந்தர் நியமனத்தை விரைவாக நடத்துவதன் மூலம் பட்டமளிப்பு விழாவை நடத்த வேண்டும் என்றும் , மூன்று மாத காலத்துக்கு மேலாக வெளியிடப்படாமலிருக்கும் பரீட்சை முடிவுகளை வெளியிட வேண்டும் என்றும் குறிப்பிட்டு  இன்று 15 ஆம் திகதி வியாழக்கிழமை தமது கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணிக்த்துள்ளனர்.