நீர்­கொ­ழும்பு புனித செபஸ்­தியார் சிலை மீது கல்­வீச்சு

271 0

நீர்­கொ­ழும்பு மீரி­கம பிர­தான வீதியில் கட்­டு­வ­ப்பிட்­டிய பிர­தே­சத்தில் அமைக்­கப்­பட்­டி­ருந்த புனித செபஸ்­தியார் சிலை மீது கடந்த 6 ஆம் திகதி  விஷ­மி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட கல்­வீச்சுத் தாக்­குதல் தொடர்­பாக கட்­டானை பொலி­ஸா­ரால் 20க்கு மேற்­பட்டோர் விசா­ரணை செய்­யப்­பட்­டுள்­ளனர்.  சம்­பவம் தொடர்­பாக இது­வரை எவரும் கைது செய்­யப்­ப­ட­வில்லை என பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

கல்­வீச்சு கார­ண­மாக செபஸ்­தியார் சுரூபம் வைக்­கப்­பட்­டி­ருந்த கண்­ணாடிப் பேழைக்கு சிறிது சேதம் ஏற்­பட்­டது. சம்­ப­வத்தை அடுத்து 6ஆம் திகதி பிர­தே­ச­ வா­சிகள் பிர­தான வீதியில் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர்.

இதனை அடுத்து அங்கு வருகை தந்த கர்­தினால் மல்கம் ரஞ்சித் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டோரை கட்­டு­வ­பிட்­டிய தேவா­ல­யத்­துக்கு அழைத்து கலந்­து­ரை­யாடி அனை­வரும் அமை­தி­யாகச் செயற்­பட வேண்டும் என்றும், சம்­பவம் தொடர்­பாக உயர் மட்­டத்தின் கவ­னத்துக்கு கொண்டு வரு­வ­தா­கவும்  உறுதி வழங்­கினார். இதனை அடுத்து பிர­தே­சத்தில் அமைதி நில­வி­யது.

இந்தக் குண்டுத் தாக்­கு­தலின் பின்­ன­ணியில் இருப்­ப­வர்கள் யார்? ஏன் இதனை மேற்­கொண்­டார்கள்?, ஏன் எமது மக்­களின் வாழ்க்­கையை நாச­மாக்­கி­னார்கள்? போன்ற கேள்­வி­களை  அர­சியல் தலை­வர்­க­ளிடம் மீண்டும் மீண்டும் நாம் கேட்­கிறோம்.  நாங்கள் மிகவும் அவ­தா­ன­மாக நடந்­து­கொள்ள வேண்டும். காரணம் இது­ போன்ற சம்­ப­வங்­களின் பின்­ன­ணியில் யார் உள்­ளார்கள் என்­பது எமக்குத் தெரி­யாது  என்று கர்­தினால் பிர­தே­ச­வா­சிகள் முன்­னி­லையில் உரை­யாற்றும் போது கூறினார்.

இந்தச் சம்­பவம் தொடர்­பாக  கட்­டானை பொலிஸ் நிலைய  குற்ற விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி  பொலிஸ் பரி­சோ­தகர் சுதத் நிவுன் எல்ல தலை­மையில் விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கி­றது. பிர­தே­சத்திலுள்ள சிசி­ரிவி காட்­சி­க­ளையும் பொலிஸார் ஆராய்ந்­துள்­ளனர். ஆயினும் இது­வரை ஒரு­வரும் கைது செய்­யப்­ப­ட­வில்லை என குற்ற விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் சுதத் நிவுன் எல்ல தெரி­வித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஐந்து பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள தாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித் துள்ளார். தற்போது கட்டுவப்பிட்டிய பிரதே சம் உட்பட நீர்கொழும்பு  நகரில் அமைதி நிலவுகிறது.