எதிர்வரும் 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான (முதல் நான்கு மாதம்) இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தை பாராளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ் ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளமையினை கருத்திற்கொண்டே மேற்கண்ட இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.