மஸ்கெலியாவில் சடலம் மீட்பு ; அடையாளங்காண உதவுமாறு பொலிஸார் தெரிவிப்பு

285 0

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டீசைட் தோட்ட மல்லியப்பு பிரிவில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இச்சடலத்தை விறகு வெட்டச் சென்ற ஒருவர் கண்டு மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்ததை தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் உடன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவிக்கையில், இச்சட்டத்தை இதுவரை அடையாளம் காண முடியாத வண்ணம் உள்ளமையால் ஹட்டன் நீதிவான் நீதிமன்ற நீதிபதி வருகை தந்த பின்னர் பிரேத பரிசோதனை அறிக்கை பெறவுள்ளதாவும் தெரிவித்தார்.