யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறை மூன்றாம் வருட மாணவன் நடராசா கஜனின் இறுதி நிகழ்வு

333 0
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி  உயிரிழந்த யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறை மூன்றாம் வருட மாணவன் நடராசா கஜனின் இறுதி நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை அவரது கிளிநொச்சி  பாரதிபுரத்தில் அமைந்துள்ள இல்லத்தில் நடைபெற்று இரணைமடு பொது மயானத்தில் சடலம்   அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
காலை பத்து மணிக்கு  அவரது இல்லத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று  திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பல்கலைக்கழக மாணவா்கள்,  பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகா்கள் என பெரும் திரளானவா்கள் கலந்துகொள்ள இறுதி ஊா்வலம்  இடம்பெ ற்றது.
அஞ்சலி நிகழ்வின் போது வடக்கு மாகாண கல்வி அமைச்சரும் பதில் முதலமைச்சருமான த.குருகுலராஜா  இரங்கல் உரை யாற்றிக்கொண்டிருந்த போது தங்களது கடும் எதிா்ப்பினை தெரிவித்த பல்கலைக்கழக மாணவா்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த ஒலி வாங்கிகளை கழற்றி எறிந்தனர்.. அத்தோடு ஊடகவியலாளா்களையும் வெளியேறுமாறும் அவா்கள் கூச்சலிட்டனா். இதனால் அங்கு சிறுது நேரம் அமைதியின்மை ஏற்ப்பட்டது.
மேலும் எந்த அரசியல்வாதிகளும் இங்கு  உரையாற்றக் கூடாது என பல்கலைக்கழக மாணவா்கள்  தெரிவித்த நிலையில் அங்கு வருகை  தந்திருந்த பாராளுன்ற உறுப்பினா்கள், மாகாண சபை உறுப்பினா்கள் எவரையும் ஏற்பாட்டாளா்கள் பேசுவதற்கு அனும தியளிக்கவில்லை.
பின்னா் கிராம மட்ட அமைப்புகள், ஒரு சில மாணவா்களின் உரையுடன் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்று நிறைவுற்றது.