சுதந்திரக் கட்சியினருக்கு எந்தவொரு அநீதியும் ஏற்பட இடமளிக்க மாட்டேன்-மஹிந்த

233 0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சார்ந்தவர்களுக்கு எந்தவொரு அநீதியும் ஏற்பட இடமளிக்கப்படமாட்டாது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தங்களுடன் இணைந்து செயற்படுவதில் எவ்வித தடையும் இல்லை என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சார்ந்த பெரும்பாலானோர் தனது தரப்பிற்காகவே பணியாற்றினர் என்றும் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.