கூட்டணி தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்கிழமை இறுதித்தீர்மானம்

250 0

எதிர்வரும் செவ்வாய்கிழமையாகும் போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடி இறுதித்தீர்மானம் ஒன்றுக்கு வரவுள்ளதாக அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

கூட்டணி தொடர்பான யாப்பில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட இருந்த நிலையில் தற்போது அந்த நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

களுத்துறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார்.