ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மீண்டும் அமைச்சரவை கூட்டம்

272 0

201610230918038245_o-panneerselvam-headed-ministers-meeting-going-on-tomorrow_secvpfதமிழக அமைச்சரவை கூட்டம் கடந்த 19-ந் தேதியன்று நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தலைமைச் செயலகத்தில் கூடியது. அந்த கூட்டத்தில் உள்ளாட்சி மன்றங்களுக்கான தனி அதிகாரிகள் நியமனம் உள்பட சில முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த நிலையில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மீண்டும் அமைச்சரவை கூட்டம் 24-ந் தேதி (நாளை) காலையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. அன்றோடு உள்ளாட்சி மன்றங்களின் பிரதிநிதிகளின் பதவி காலம் முடிவடைவது குறிப்பிடத்தக்கது.

மேலும், நாளை நடக்க இருக்கும் கூட்டத்தில் காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரம் உள்ளிட்ட சில பிரச்சினைகள் பற்றி ஆலோசனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.