தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மஹிந்தவுடன் சந்திப்பு

296 0

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சிசபை உறுப்பினர்கள் சிலர் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சந்திப்பு கொழும்பு விஜேராம வீதியில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் இல்லத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

இச் சந்திப்பில் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் வேட்பாளர் குறித்து குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தற்போது பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் வேட்பாளர்களை அறிவிப்பதில் பிரதான கட்சிகள் தொடர்ந்தும் இறுபறியில் உள்ளன.

இதனிடையே பொதுஜக பெரமுனவினர் தமது ஜனாதிபதி வேட்பாளரை எதிர்வரும் 11 ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.