ஈரோட்டில் கார் மீது லாரி மோதல்; 3 பேர் பலி

281 0

ஈரோட்டில் காரும், லாரியும் மோதி கொண்டதில் 3 மில் தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர்.

ஈரோட்டில் சத்தியமங்கலம் அருகே சென்று கொண்டிருந்த கார் மீது காபி கொட்டைகளை ஏற்றி சென்ற லாரி ஒன்று திடீரென மோதி விபத்திற்குள்ளானது.
இந்த சம்பவத்தில் காரில் பயணம் செய்த அருப்புக்கோட்டையை சேர்ந்த 3 மில் தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர்.  அவர்கள் ஜெய்கணேஷ், சங்கர், தங்கபாண்டியன் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.
இந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.  அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.  இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.