மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமிக்கு எதிராக வழக்கு

335 0

wasantha-samarasinghe-415x260மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமிக்கு எதிராக வழக்குத் தொடர உள்ளதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் தற்போதைய ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி, முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் மற்றும் மத்திய வங்கியின் சில அதிகாரிகளுக்கு எதிராக அடுத்த வாரம் வழக்குத் தொடரப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கி பிணை முறி மோசடி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் ஆளுனருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மோசடிகளுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வங்கியின் ஆளுனரிடம் கோரப்பட்டதாகவும் தொடர்புடைய அதிகாரிகள் தண்டிக்கப்படாத காரணத்தினால் தாம் வழக்குத் தொடரத் தீர்மானித்ததாகவும் தெரிவித்துள்ளார்.