அப்பாவிப் பொதுமக்கள் 41 பேர்கள் பலியாகவும் மேலும் பலர் காயமடையவும் காரணமாக அமைந்த துருக்கியின் தலைநகர் இஸ்தான்பூல் நகரின் அதாதுர்க் சர்வதேச விமான நிலையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வன்மையாகக் கண்டித்துள்ளார்.
சாதாரண பொது மக்கள் மீது மேற்கொள்ளப்படும் இத்தகைய மிலேச்சத்தனமான பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச ரீதியாக கூட்டாக நடவடிக்கை எடுக்கவேண்டியதன் அவசியத்தை தாம் மீண்டும் வலியுறுத்துவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
துருக்கி நாட்டின் ஜனாதிபதி ரஜப் தைய்யிப் அர்துகான் அவர்களுக்கு அனுப்பிவைத்துள்ள விசேட அனுதாபச் செய்தியிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
இந்த கோழைத்தனமான மிலேச்சப் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் துருக்கி அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் தமது ஆழ்ந்த கவலைகளையும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், உயிரிழந்தவர்களுக்கு அனுதாபங்களைத் தெரிவித்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய தாம் தாம் பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025 -
உங்கள் இருப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள்!
October 15, 2024
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
கைபேசிச் சாட்சி!
April 6, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
35ஆவது அகைவை நிறைவில் தமிழாலயங்கள்
March 5, 2025 -
அன்னை பூபதி அவர்களின் நினைவுக் கவிதைப் போட்டி 2025
February 24, 2025 -
அன்னை பூபதி நினைவாக உள்ளரங்க விளையாட்டுப் போட்டிகள்- நெதர்லாந்து
February 7, 2025