அடுத்து ஆண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்ட மூலம் நாடாளுமன்றத்தில்

297 0

160621070646_srilanka_parliment_512x288__nocredit2017ஆம் ஆண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்ட மூலம் இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

இதில் முன்வைக்கப்பட்டுள்ள ஒதுக்கீடுகளின் படி, பாதுகாப்புக்கு 28 ஆயிரத்து 344 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் துறை அமைச்சுக்கு 16 ஆயிரத்து 340 கோடி ரூபாய் ஒதுக்கிடப்படுகிறது.

சுகாதாரத்துறைக்கு 16 ஆயிரத்து 94 கோடி ரூபாவும், கல்விக்காக 7 ஆயிரத்து 694 கோடி ரூபாய்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இன்று முற்பகல் நாடாளுமன்றம் கூடிய போது, நிதி அமைச்சர் ரவி கருநாயக்க இந்த ஒதுக்கீட்டு சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.

இதனை அடுத்து நாளை வரையில் நாடாளுமன்ற அமர்வு, சபாநாயகரினால் ஒத்திவைக்கப்பட்டது.