சம்பூரில் சூரிய மின் உற்பத்தித் திட்டம் அமைக்க இந்தியா விருப்பம்!

380 0

sampoorசம்பூரில் சூரிய மின் உற்பத்தித் திட்டத்தை அமைப்பதற்கு இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. சம்பூரில் அமைக்கத் திட்டமிட்டிருந்த 500 மெகாவாட் அனல் மின் நிலையத்தை அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையில் அரசாங்கம் அதனைக் கைவிடுவதாக அறிவித்து ஒரு மாதத்திற்குள் இந்தியா சூரிய மின் உற்பத்தித் திட்டத்தை அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளது.

கோவாவில் பிரிக்ஸ் – பிம்ஸ்ரெக் மாநாட்டின் பக்க நிகழ்வாக, இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கும் சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுக்களின்போது, இத்திட்டத்தை நரேந்திரமோடி முன்வைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அனல் மின் திட்டத்திற்குப் பதிலாக, இயற்கை எரிவாயு மின்திட்டம் அல்லது சூரியசக்தி அல்லது காற்றாலை மின்திட்டத்தை அமைப்பது தொடர்பாக பரிசீலித்து வருவதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவிததிருந்தது.

2020ஆம் ஆண்டு 220 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நோக்குடன், சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன சூரிய சக்திக்கான போர் என்ற திட்டத்தை கடந்த மாதம் அறிமுகப்படுத்தி வைத்தார்.

2025ஆம் ஆண்டு 1000 மெகாவாட் மின்சாரத்தை இந்த திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்ய முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டிருந்தார். சிறீலங்கா புதுப்பிக்கத்தக்க சக்தியின் பக்கம் திரும்பியுள்ளதால் இந்தியா சூரிய மின்சக்தி உற்பத்தித் திட்டத்தை அமுல்படுத்த முன்வந்துள்ளது.