ஐ.எஸ்.அமைப்புக்கு எதிராக யாழில் நாளை ஆர்ப்பாட்டம்

329 0

ஐ.எஸ்.அமைப்­புக்கு எதி­ராக யாழ்ப்­பா­ணத்தில் நாளை  வெள்­ளிக்­கி­ழமை ஆர்ப்­பாட்டம் ஒன்று முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது.

யாழ்ப்­பாணம் ந­கரில் அமைந்­துள்ள பள்­ளி­வா­சல்­களின் ஏற்­பாட்டில் இந்த ஆர்ப்­பாட்டம் ஐந்து சந்திப் பகு­தியில் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.

யாழ்ப்­பாணம் – மானிப்பாய் வீதியில் அமைந்­துள்ள பள்­ளி­வா­சலில் நாளை வெள்­ளிக்­கி­ழமை நண்­பகல் கூடும் இஸ்­லா­மி­யர்கள், ஐ.எஸ்.­ஐ.எஸ். அமைப்­புக்கு எதி­ரான பதா­தை­களை ஏந்­தி­ய­வாறு பேர­ணி­யாக ஐந்து சந்­திக்குச் சென்று அங்கு ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­ப­ட­வுள்­ள னர் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நாட்டில் ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று நடத்­தப்­பட்ட தற்­கொ­லைக்­குண்டுத் தாக்­கு­தல்­களில் 250இற்கும் மேற்­பட்ட அப்­பாவிப் பொது­ மக்கள் கொல்­லப்­பட்­ட­துடன், 500இற் கும் மேற்­பட்ட பொது­மக்கள் படு­கா­ய ­ம­டைந்தனர்.

இந்தத் தாக்­ கு­தல்­க­ளுக்கு சிரி­யாவைத் தள­மாகக் கொண்ட சர்­வ­தேச பயங்­க­ர­வாத இயக்­க­மான ஐ.எஸ்.ஐ.எஸ். உரிமை கோரி­யி­ருந்­தது. அத­னை­ய­டுத்து புத்­தளம் உள்­ளிட்ட நாட்டின் சில இடங்­களில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­புக்கு எதி­ராக முஸ்லிம் மக்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தனர். இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் நாளை வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.