வன்னி மக்களுக்கு ஜனாதிபதி எதனையும் செய்யவில்லை-பி­ர­பா­க­ணேசன் இரா­ஜி­னாமா

353 0

கடந்த இரண்­டு­ வரு­ட­கா­ல­மாக ஜனா­தி­பதி ­மைத்­தி­ரி­பா­ல ­சி­றி­சே­னவின் கீழ்வரும் அமைச்சின் ஊடான அபி­வி­ருத்­தி ­க­ருத்­திட்­ட­ ப­ணிப்­பா­ள­ரா­க ­க­ட­மை­யாற்­றிய ஜன­நா­ய­க­ மக்கள் காங்­கிரஸ் தலை­வரும் முன்னாள் பிர­தி ­அ­மைச்­ச­ரு­மா­ன ­பி­ர­பா­க­ணேசன் தன­து ­ப­த­வியை இரா­ஜி­னா­மா­ செய்­துள்ளார்.

இது குறித்து பிரபா கணேசன் ஊட­கங்­க­ளுக்கு கருத்­து­ தெ­ரி­விக்­கையில்,

நான் கடந்த இரண்­டு­வ­ரு­ட­கா­ல­மாக ஜனா­தி­ப­தியின் வன்­னி­ மா­வட்­ட­ க­ருத்­திட்­ட­ ப­ணிப்­பா­ள­ரா­க­ நி­ய­மிக்­கப்­பட்­டி­ருந்தேன். உண்­மை­யிலே இது ஒரு­ அ­ர­சியல் நிய­ம­ன­மே­யாகும். இந்­த­ ப­த­வியின் ஊடா­க ­பா­ரி­ய­ அ­ளவில் மக்­க­ளுக்­கா­ன­ சே­வை­யி­னை ­ஆற்­றக்­கூ­டி­ய­தா­க ­எவ்­வி­த­மா­ன ­நி­தி­ ஒ­துக்­கீ­டு­களும் சரி­யா­ன­ மு­றை­யிலே வழங்­கப்­ப­ட­வில்லை.

இருப்­பினும் கடந்த ஆண்­டு நான் கொடுத்­த­ ப­ல ­வே­லைத் ­திட்­டங்­களில் ஒரு ­சி­ல ­வேலைத் திட்­டங்­களே நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டன. இது சம்­பந்­த­மா­க­ க­டந்­த­ ஆண்டு இறு­தியில் இடம்­ பெற்­ற­ ப­ணிப்­பா­ளர்கள் கூட்­டத்தில் என­து­ அ­தி­ருப்­தி­யை ­தெ­ரி­வித்­த­ பொ­ழுது 2019ஆம் ஆண்­டு­ பா­ரி­ய­ அ­ளவில் நிதி­ ஒ­துக்­கீ­டுகள் செய்­யப்­படும் என்­ற­ உத்­த­ர­வாதம் மேல­தி­க ­செ­ய­லா­ளரின் ஊடா­க ­எ­னக்­கு ­வ­ழங்­கப்­பட்­டது. அதன் அடிப்­ப­டையில்  இந்­த­ வ­ரு­ட­ ஆ­ரம்­பத்தில் முல்­லைத்­தீவு, வவு­னியா, மன்னார் மாவட்ட ஒவ்­வொரு பிர­தே­ச­ செ­ய­ல­கங்­களின் ஊடா­ன ­கி­ராம தலை­வர்­களின் சந்­திப்பை ஏற்­ப­டுத்தி  அதன் ஊடாக பல ­கோ­டி ­ரூ­பாய்­க­ளுக்­கான வேலைத்­ திட்­டங்­க­ளைப் ­பெற்றுக் கொண்டேன். குறிப்­பாக வன்­னி ­மா­வட்­டத்தில் நில­வி­வரும் சிறு­நீ­ர­க­ நோ­யினைக் கட்­டுப்­ப­டுத்­தக்­ கூ­டி­ய ­சுத்­தி­க­ரிக்­கப்­பட்­ட ­தண்ணீர் தாங்­கிகள் அமைப்­ப­தற்­கா­ன வே­லைத்­ திட்­டங்­க­ளை ­உள்­வாங்­கினேன்.

இவ் வேலைத்­திட்­டங்­களை ஜனா­தி­ப­தியின் செய­ல­கத்­திற்­கு ­அ­னுப்­பி­யபோது எவ்­வா­றான கவ­னமும் எடுக்­கப்­ப­டா­த­தை நான் அறிந்தேன்.

இது சம்­பந்­த­மாக ஸ்ரீலங்­கா ­சு­தந்­தி­ரக் ­கட்­சியின் செய­லாளர் பாரா­ளு­மன்­ற­ உ­றுப்­பினர் தயா­சி­றி­ த­யா­சே­க­ர­விடம் முறை­யிட்­ட­போ­து­ எ­ன­து­ செ­யல்­பா­டு­களை நிறுத்­த ­வேண்டும் என ஸ்ரீலங்­கா­ சு­தந்­தி­ர­ கட்­சியின் வன்னி மாவட்­ட­ பா­ரா­ளு­மன்ற உறுப்­பினர் மஸ்தான் முறைப்­பா­டு­ செய்­த­தா­கவும் நான் என­து­ கட்­சி­யான ஜன­நா­ய­ க­மக்கள் காங்­கி­ர­ஸையே வன்­னி­மா­வட்­டத்தில் வளர்த்­தெ­டுப்­ப­தா­கவும்  ஜனா­தி­பதி சம்­பந்­த­மான எந்­த­வொரு விட­யத்­தையும் மக்­க­ளிடம் கொண்டு செல்­வ­தில்லை எனவும் குற்றம் சுமத்­தி­ய­தா­க ­தெ­ரி­வித்தார்.

அதேபோல் நான் வன்­னி­ மா­வட்­ட­ மக்­களின் தேவைக்­கெ­ன­ கொ­டுத்­த­ அ­னைத்­து­வே­லைத்­ திட்­டங்­களும் இடை ­நி­றுத்­தப்­பட்­ட­தா­கவும் தெரி­வித்தார்.

மக்­க­ளிடம் ஜனா­தி­ப­தியைப் பற்­றி­ தெ­ரி­விப்­ப­தற்கு ஜனா­தி­பதி எவ்­வி­த­மான  சேவை­யி­னையும் வன்­னி­ மா­வட்­ட ­மக்­க­ளுக்கு செய்­ய­வில்லை. மாறா­க­ நாட்டின் அர­சியல் குழப்­பங்­க­ளுக்­கே­ கா­ர­ண­மாக  இருந்­தி­ருக்­கின்றார். இருப்­பினும் வன்னி  மாவட்­ட ­மக்­களின் சேவை­யினை முன்­னெ­டுப்­ப­தற்­கா­கவே நான் பொறு­மை­யுடன் செயல்­பட்டேன்.

வன்­னி­ மா­வட்­டத்தில் எனது கட்­சியின்  வளர்ச்­சி­யை ­பார்த்­து­ ப­யந்­து ­போன தமிழ் வாக்­கு­களைப் பெற்­று­ பா­ரா­ளு­மன்றம்  சென்ற மஸ்தான் இதன் ஊடாக வன்­னி­மா­வட்­ட ­தமிழ் மக்­க­ளுக்­கு நான் செய்­து­ கொண்­டி­ருக்கும் சேவை­யினை இடை­நி­றுத்த முயற்­சிக்­கின்றார். வன்­னி­ மா­வட்­டத்தில் 85 வீத­மா­ன­வர்கள் தமிழ் மக்­களே. நான் எனது சொந்த நிதியின் ஊடா­கவே அதி கூடியமக்கள் தேவைகளை நிறை வேற்றிக் கொடுத்திருக்கின்றேன்.

ஜனாதிபதியின் பணிப்பாளர் என்ற முறையில் அனைத்து கிராம மட்டங்களில் உள்ள தலைவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு இந்த பதவி எனக்கு பிரயோஜனமாக இருந்துள்ளது. எமது கட்சியின் வளர்ச்சியும் வன்னி மாவட்ட மக்கள் எனக்கு கொடுத்துக் கொண்டிருக்கும் அமோக ஆதரவும் இம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினருக்கும், அமைச்சர் ஒருவருக்கும் இனி ஒரு போதும் தமிழ் வாக்குகளைப் பெற முடியாது என்று தெரியவந்துள்ளது.

அதே போல் இன்று வன்னி மாவட்டத்தில் எந்த மான முள்ள தமிழனும் எதிர்காலத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் வாக்களிக்கப் போவதில்லை என்பதில் திடமாக இருக் கின்றார்கள் என்பதுதெளிவாக உள்ளது என்றார்.