விபத்தில் ஒரே குடும்பத்தின் மூன்று பேர் பலி

222 0
புத்தளம் – திருகொணமலை வீதியில் சிங்காரகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கர வண்டி ஒன்றும் கொள்கலன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டியில் பயணித்த ரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

கலகரபேவ, நொச்சியாகம பிரதேசத்தைச் ​சேர்ந்த 48 வயதுடைய கணவன், மனைவி மற்றும் 12 வயதுடைய மகன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் கொள்கலன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், நொச்சியாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.