போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

236 0

கொஹுவல பகுதியில் போலி நாணயத்தாள்களை வைத்திருந்த இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த நபர்களிடமிருந்து 41 ஐந்நூறு ரூபா போலிநாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த இருவரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மாளிகாவத்தை பகுதியை சேர்ந்த 19 மற்றும் 20 வயதான நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.