நாத்தாண்டி வன்முறை தொடர்பில் கைதான 31 பேருக்கு பிணை

240 0

கொஸ்வத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாத்தாண்டிய – கொட்டாரமுல்லை பகுதியில் கடந்த 13  ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 31 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மாரவில நீதிவான் நீதிமன்றில் அவர்கள் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோதே,  தலா 50 ஆயிரம் ரூபா பெறுமதியான சரீரப் பிணைகளில் செல்ல நீதிவான் அனுமதித்தார்.

இதேவேளை மினுவங்கொடை வன்முறைகள் தொடர்பிலும் கைதாகி விளக்கமறியலில் இருந்த 15 சந்தேக நபர்களும் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.