சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கொலை 4 பொலிஸாருக்கு விளக்கமறியல்

327 0

courtதிருட்டு குற்றச்சாட்டில்கைது செய்யப்பட்டு சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டுவந்த 4 பொலிஸ் உத்தியோஸ்தர்கள் இன்று குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கொலை நடைபெற்ற 2011 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக இருந்து சந்திக்க பண்டார உள்ளிட்ட 4 பொலிஸாரே சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸாரினார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இவர்கள் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜ முன்னிலையில் இன்று முற்படுத்தப்பட்டனர்.
இவர்கள் தொடர்பாக வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவான் 4 பேரையும் எதிர்வரும் 24 ஆம் திகதிவரைக்குமு; விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.