தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக யாழ்.பல்கலைக்கழகத்திலும் போராட்டம் (படங்கள் இணைப்பு)

370 0

k800_photo-5மலையக தோட்டத் தொழிலாளர்கள் மேற்கொண்டுவரும் சம்பள உயர்வு கோரிக்கை போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் முகமாக யாழ்.பல்கலைக்கழக சமூகத்தினரும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று நடைபெற்ற இப் போராட்டத்தில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் ஆகியோர் இணைந்து கொண்டு போராட்டத்திற்கு வலுச் சேர்த்திருந்தனர்.
யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ள பரமெஸ்வரன் ஆலையத்திற்கு முன்பாக ஒன்று கூடிய பல்கலைக்கழ சமூகத்தினர் அங்கிருந்து நடைபயணமாக பல்கலைக்கழ பிரதான நுழைவாயிலை வந்தடைந்தனர்.
அங்கு வந்த அவர்கள் மலையக தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கையினை நிறைவேற்றுமாறு கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

k800_photo-1 k800_photo-2 k800_photo-3 k800_photo-4