வவுனியாவில் கிணற்றிலிருந்து ஒருதொகை வெடி பொருட்கள் மீட்பு!

335 0

vavuniya-1வவுனியா – தச்சன்குளம் பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றில் இருந்து ஒரு தொகுதி வெடிபொருட்கள் இன்று வவுனியா பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.

தோட்ட கிணற்றை அதன் உரிமையாளர் நீர் இறைத்து துப்பரவு செய்த போது கிணற்றுக்குள் இருந்து இரு தகரப் பெட்டிகளை மீட்டுள்ளார்.

குறித்த தகரப் பெட்டிகளில் வெடிபொருட்கள் இருப்பதைக் கண்டு வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.இதனையடுத்து வவுனியா பொலிஸார் வெடிபொருட்களை மீட்டுள்ளனர். ஜே.எம்.ஓ கிளைமோர்- 01, மிதிவெடிகள்- 08, பரா வெளிச்சக்குண்டு- 04, டிக்னேற்றர்- 50 என்பன இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கிணற்றுக்குள் மேலும் பல வெடிப்பொருட்கள் இருப்பதாகவும் இதனை பொலிஸார் மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த தோட்டம் வவுனியா பிரதான ஜோசப் இராணுவ முகாமுக்கு அருகில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.