நடைபவனி வவுனியாவைச் சென்றடைந்தது(காணொளி)

419 0

vavuniyaபுற்றுநோய் வைத்தியசாலை அமைப்பதற்கான நிதி சேகரிப்பு நடை பவனி இன்று வவுனியா நகரை சென்றடைந்தது.

புற்றுநோய் வைத்தியசாலை அமைப்பதற்கான நிதி சேகரிப்பு நடை பவனி இன்று காலை 5.00 மணிக்கு வவுனியா புளியங்குளத்தில் ஆரம்பமாகி வவுனியா நகரை சென்றடைந்தது.
வவுனியா நகரில் பாடசாலை மாணவர்கள், வியாபாரிகள், மக்கள் என பலர் நடைபவனியில் வந்தவர்களை மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

வவுனியா தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் நிதி சேகரிப்பு நடைபவனி அணியினரை பாண்டு வாத்திய அணிவகுப்புடன் வவுனியா பொலிஸ் நிலையத்திலிருந்து அழைத்துச் சென்றனர்.