கிளிநொச்சியில் கைகுண்டு

336 0

கிளிநொச்சி  உருத்திரபுரம், சிவநகர் பகுதியில் உள்ள  பாலத்திற்கருகில் கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டு குண்டுசெயலிழக்கும் பிரிவினாரால் செயலழக்கச் செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி உருத்திரபுரம்  சிவநகர் பகுதியிலுள்ள பாலத்திற்கு அருகில் வெடி குண்டு ஒன்று கானப்படுவதாக இன்று (01) கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைவாக இன்று காலை சம்பவ இடத்திற்குச் சென்ற கிளிநொச்சிப் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர்,  இராணுவத்தினர் குண்டைப் பாதுகாப்பாக அகற்றி செயலிழக்கச் செய்துள்ளனர்.
கடந்த இறுதி யுத்தத்தின் போது கைவிடப்பட்ட குண்டாக இது இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.