கேரளா கஞ்சா – ஐஸ் போதைப் பொருளுடன் நாள்வர் கைது – 180 சிகரட்டுகளும் மீட்பு

341 0

மாத்தறை – வெலிகம பகுதியில் போதைப் பொருட்களுடன் சந்தேக நபர்கள் நாள்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெலேன பகுதியில் செவ்வாய்க்கிழமை மாத்தறை ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது சந்தேக நபர்கள் நாள்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குற்றத் தடுப்பு பிரிவினர் குறித்த பகுதியில் சென்ற சொகுசு காரொன்றை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். இதன்போது காரிலிருந்து ஒரு கிலோ 55 கிராம் கேரளா கஞ்சாவும் , 560 கிராம் ஐஸ் போதைப் பொருளும் 180 சட்டவிரோதமான சிகரட்டுகளும் மீட்பட்டுள்ளன.

கொழும்பு மற்றும் வெலிகம  பகுதியளைச் சேரந்த 21 – 22 வயதுகளுக்கு இடைப்பட்ட நாள்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.