கல்முனை உள்ளிட்ட பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது

263 0

கல்முனை,சாய்ந்தமருது மற்றும் சவளக்கடை பகுதிகளில் அமுல்படுத்தபட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் நேற்று இரவு 8 மணி முதல் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.

கடந்த 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன நிலைமையை கருத்திற்கொண்டு  கடந்த வாரம் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தபட்டிருந்தது.

அதன் பின்னர் நாடளாவிய ரீதியல் பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னரும் கல்முனை, சாய்ந்தமருது மற்றும் சவளக்கடை பகுதிகளில் இடம்பெற்ற தாக்குதல்கள் காரணமாக இரவு வேளைகளில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.