எனக்கு விசேட கார் வேண்டாம், நாட்டு மக்களின் பாதுகாப்பே முக்கியம்- காதினல் மெல்கம் ரஞ்ஜித்

292 0

நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு சூழ்நிலைமைகளைக் கருத்தில் கொண்டு தனது பாதுகாப்புக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படவிருந்த குண்டு துளைக்காத காரை தான் வேண்டாம் எனக் கூறியதாகவும், தன்னுடைய பாதுகாப்பை விட நாட்டினதும், நாட்டு மக்களினதும் பாதுகாப்பே அவசியமானது எனவும் காதினல் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்தார்.

நேற்று (30) காதினலின் உத்தியோகபுர்வ இல்லத்தில் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இவர் இதனைக் கூறினார்.

எனக்கு சாதாரண வாகனம் போதுமானது. எனது பாதுகாப்பை விட பொது மக்கள் பாதுகாப்பு முக்கியமானது. அவர்களுக்கு பாதுகாப்பை வழங்குமாறு நான் அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனது பாதுகாப்புக்கு வேறு யாரும் தேவையில்லை. எனக்கு கடவுளின் பாதுகாப்பு இருக்கின்றது.

நாட்டில் ஏற்பட்ட இந்த அனர்த்தத்திற்காக அரசாங்கத்துக்கு  அமெரிக்காவிலிருந்து டொலர்கள் வழங்கப்பட்டுள்ளமை குறித்து அமைச்சர் ஒருவர் கூறியுள்ளமை குறித்து காதினலிடம் வினவப்பட்டபோது, அது என்ன பிச்சைக்கார செயல் என பதிலளித்தார்.