தேக்கு மரக் கட்டைகள் கடத்திய மூவர் கைது!

333 0

கடற்படையினரினால் நேற்று புத்தளம், மதுரகம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது அனுமதி பத்திரங்கள் இல்லாமல் தேக்கு மரக் கட்டைகள் கடத்திச்சென்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 06 அடி நீளமான 12 தேக்கு மரக் கட்டைகள், 03 அடி நீளமான 05 தேக்கு மரக் கட்டைகள் மற்றும் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்ட டீமொ பட்டா லொரி வண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்த நபர்கள் 41 மற்றும் 44 வயது இடையில் புத்தளம், மதுரகம பகுதியில் வசிக்கின்றவர்களாக கண்டரியப்பட்டுள்ளனர். 

கைதுசெய்யப்பட்ட நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட மரக் கட்டைகள் மற்றும் லொரி வண்டி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.