பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னே பல்கலைகழகங்கள் திறக்கப்படும்!

323 0

பல்கலைகழகங்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டவுடன் அடுத்த கல்வி நடவடிக்கைகளின் ஆரம்ப தினத்தை அறிப்பதாகவும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டவுடன் பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை மாணவர்கள் பின்பற்றுவது அவசியம் என்று அந்த ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டீ சில்வா அறிவித்துள்ளார்.

அரச பல்கலைகழகங்கள் உயர்க்கல்வி நிறுவனங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயங்கள் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.