கிளிநொச்சி வாகன விபத்தில் ஒருவர் பலி ; ஒருவர் படுகாயம்

354 0

கிளிநொச்சி சேவியர் கடை சந்தி பகுதியில்  இன்று மாலை துவிச்சக்கர வண்டியில் சென்ற  முதியவரை பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்தவர் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் துவிச்சக்கர வண்டியுடன் மோதுண்டு  விபத்துக்குள்ளானதில் குறித்த முதியவர் உயிரிழந்தார்.

குறித்த துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த சதாசிவம் சங்கநிதி வயது 83 என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

படுகாயமடைந்த அவரை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று  சிகிச்சை அளித்தபோதும்   சிகிச்சை பலனின்றி  அவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் பலத்த காயங்களுடன் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் குறித்த விபத்து  தொடர்பாக மேலதிக விசாரணைகளைக் கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.